( 21 Sep, 2015) தமிழிலக்கிய வினா - விடை 1000 Published By : upscgk.com தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல் 1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12 2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு 3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை 4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை 5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை 6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை 7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை 8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார் 9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள் 10. அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம் 11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை 12. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90 13. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை 14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை 15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால் 16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை 17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை 18. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன் 19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன் 20. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி 21. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்) 22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர் 23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார் 24. அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன் 25. அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி 26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி 27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து 28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார் 29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன் 30. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள் 31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார் 32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா 33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து 34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999 35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன் 36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார் 37. . அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள் 38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி 39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன் 40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி 41. அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி 42. அரக்கு மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி 43. அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி, 44. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை 45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண் 46. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன் 47. அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர் 48. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர் 49. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ் 50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர் 51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம் 52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர் 53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு 54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர் 55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல் 56. அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார் 57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார் 58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி 59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன் 61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன் 62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம் 63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார் 64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர் 65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102 66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன் 67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர் 68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு 69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி 70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர் 71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது. 72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி 73. ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு 74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை 75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு 76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன் 77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம் 78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார் 79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம் 80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை 81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல் 82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி 83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700 84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59 85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம் 86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம் 87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700 88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை 89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து 90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு 91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865) 92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார் 93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர் 94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார் 95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு 96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம் 97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470 99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர் 100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 101. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா 102. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன் 103. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார் 104. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர் 105. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 106. இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர் 107. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர் 108. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா 109. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார் 110. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார் 111. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை 112. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு 113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள் 114. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து 115. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல் 116. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி 117. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர் 118. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர் 119. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர் 120. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை 121. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா 122. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர் 123. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை 124. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார் 125. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி 126. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல் 127. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை 128. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர் 129. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா 130. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை 131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர் 132. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர் 133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார் 134. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 135. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி 136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர் 137. உண்டாட்டு - கள்குடித்தல் 138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு 140. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர் 141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர் 142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார் 143. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர் 144. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம் 145. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர் 146. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர் 147. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார் 148. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர் 149. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு 150. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன் 151. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை 152. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன் 153. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம் 154. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி 155. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா 156. உலகின் முதல் நாவல் – பாமெலா 157. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர் 158. உவமைக் கவிஞர் -சுரதா 159. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி 160. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம் 161. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம் 162. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார் 163. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம் 164. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா 165. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல் 166. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை 167. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா 168. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல் 169. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள் 170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள் 171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress 172. . எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து 173. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல் 174. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3 175. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை 176. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல் 177. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து 178. எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள் 179. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை 180. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர் 181. எயில் காத்தல் – நொச்சி 182. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு 183. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர் 184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா 185. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள் 186. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க 187. ஏழகம் - ஆட்டுக்கிடாய் 188. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார் 189. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை 190. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு 191. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு 192. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு 193. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர் 194. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார் 195. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு 196. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார் 197. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு 198. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார் 199. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார் 200. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள் 201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார் 202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469 203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா 204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் 205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6 207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா 208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை 209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார் 210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார் 211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம் 212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல் 213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 . 214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம் 215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர் 216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா 217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன் 218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி 219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா 220. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன் 221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி 222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை 223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி 224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர் 225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு 226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர் 227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை 228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா 229. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ 230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி 231. கங்கை மைந்தன் – தருமன் 232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு 233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன் 234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449 235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49 236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850 237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை 238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம் 239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா 240. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா 241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா 242. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார் 243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு 244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா 245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம் 246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார் 247. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர் 248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர் 249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர் 250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை 251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர் 252. கரந்தை - ஆநிரை மீட்டல் 253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ 254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன் 255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர் 256. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன் 257. கல்கியின் முதல் நாவல் - விமலா 258. கலம்பக உறுப்புகள் - 18 259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள் 260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார் 261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள் 262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள் 263. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள் 264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள் 265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா 266. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா 267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர் 268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150 269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா 270. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார் 271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள் 272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை 273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை 274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார் 275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை 276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள் 277. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி 279. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன் 280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா 281. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி 282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம் 283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர் 284. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து 285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை 286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன் 287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி 288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம் 289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன் 290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன் 291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம் 292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர் 293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார் 294. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை 295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம் 296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி 297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை 298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர் 299. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம் 300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம் 301. கிரவுஞ்சம் என்பது – பறவை 302. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750 303. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி 304. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள் 305. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம் 306. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல் 307. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72 308. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி 309. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம் 310. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம் 311. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன் 312. குறிஞ்சிக் கிழவன் - முருகன் 313. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி 314. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர் 315. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார் 316. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர் 317. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400 318. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள் 319. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309 320. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர் 321. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள் -குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார் 322. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர் 323. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள் 324. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440 325. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ 326. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205 327. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார் 328. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல் 329. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார் 330. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர் 331. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார் 332. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை 333. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன் 334. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு 335. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள் 336. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி 337. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன் 338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர் 339. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள் 340. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை 341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368 342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை. 343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள் 344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல் 345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார் 346. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார் 347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் 348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30 349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள் 350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று 351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார் 352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம் 353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார் 354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர் 355. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர் 356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன் 357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா 358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம் 359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914 360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம் 361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர் 362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர் 363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம் 364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள் 365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர் 366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார் 367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் 368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி 369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர் 370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர் 371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர் 372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர் 373. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன் 374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64 375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர் 376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல் 377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள் 378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர் 379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை 380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான் 381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி 382. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார் 383. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம் 384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705 385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர் 386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர் 387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க 388. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர் 389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975 390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார் 391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர் 392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன் 393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன் 394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி 395. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன் 396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர் 397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர் 398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன் 399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர் 400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை 401. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903 402. செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன் 403. செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன் 404. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார் 405. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு 406. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர் 407. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார் 408. சேயோன் - முருகன் 409. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து 410. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து 411. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார் 412. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான் 413. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை 414. சைவசமயக் குரவர்கள் - நால்வர் 415. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க 416. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க 417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை 418. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர் 419. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள 420. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை 421. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள் 422. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன் 423. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம் 424. சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா 425. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள் 426. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி 427. ஞானக் குறள் ஆசிரியர் - ஔவையார் 428. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர் 429. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர் 430. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா 431. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை 432. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர் 433. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார் 434. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர் 435. தண்டி ஆசிரியர் - தண்டி 436. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள் 437. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம் 438. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம் 439. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன் 440. தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர் 441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி 442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப் 443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர் 444. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார் 445. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி 446. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம் 447. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம் 448. தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன் 449. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா 450. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை 451. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு 452. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள் 453. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு 454. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி 455. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர் 456. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர் 457. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு 458. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி 459. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி 460. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு 461. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன் 462. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை 463. தமிழ்த்தாத்தா - உ.வே.சா 464. தமிழ்த்தென்றல் - திரு.வி.க 465. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம் 466. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103 467. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர் 468. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார் 469. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி 470. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு 471. தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர் 472. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள் 473. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர் 474. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா 475. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார் 476. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம் 477. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 478. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர் 479. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன் 480. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு 481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366 482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு 483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு 484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன் 485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை 486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன் 487. தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர் 488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு 489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி 490. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர் 491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர் 492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை 493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார் 494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை 495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி 496. தானைமறம் – தும்பை 497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன் 498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம் 499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார் 500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார் 501. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார் 502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470 503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி 504. திரமிளம் என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம் 505. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை 506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு 507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத மொழிகள், 508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல் 509. திராவிட வேதம் - திருவாய் மொழி 510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன் 511. திரிகடுகம் - சுக்கு,மிளகு,திப்பிலி 512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார் 513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி 514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர் 515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர் 516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர் 517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள் 518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி 519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர் 520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ் 521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர் 522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள் 523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன் 524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர் 525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி 526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம் பிள்ளை 527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து 528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார் நம்பி 529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா 530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன் 531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார் 532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர் 533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன் 534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல் 535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர் 536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720 537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர் 538. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர் 539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு 540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன் 541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000 542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர் 543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி 544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர் 545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869) 546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன் 547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது 548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப் 549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656 550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர் 551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார் 552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம் 553. .திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள் 554. .திருவேரகம் – சுவாமிமலை 555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார் 556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு 557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன் 558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் 559. .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார் 560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம் 561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு 562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி 563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி 564. தென்னவன் பிரமராயனெனும் 565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி 566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876 567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை 568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர் 569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா 570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை 571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான் 572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி 573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா 574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம் 575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி 576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார் 577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர் 578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார் 579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27 580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர் 581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார் 582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்- சி.புன்னைவன நாத முதலியார் – 1922 583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8 584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார் 585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள் 586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர் 587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்- 588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை- அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல் 589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை 590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர் 591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான் 592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார் 593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33 594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்) 595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார் 596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள் 597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3 598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20 599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20 600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார் 601. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி 602. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர் 603. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது--திரணதூமாக்கினியார் 604. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை- சமதக்கினி 605. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார் 606. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார் 607. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர் 608. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர் 609. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு 610. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி 611. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம் 612. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு 613. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார் 614. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880 615. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன் 616. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன் 617. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம் 618. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி 619. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம் 620. நமர் - ஒற்றர் 621. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர் 622. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு 623. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு 624. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர் 625. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார் 626. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர் 627. நளவெண்பா காண்டங்கள் – 3 628. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம் 629. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல் 630. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம் 631. நற்றிணை அடி வரையறை – 9 - 12 632. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள் 633. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ } 634. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார், 635. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார் 636. நற்றிணையில் அமைந்த பாடல்கள் - 400 637. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7 638. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல் 639. நற்றிணையின் பாவகை – அகவற்பா 640. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர் 641. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார் 642. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி 643. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175 644. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192 645. நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை 646. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல் 647. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர் 648. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர் 649. நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு 650. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32 651. நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர் 652. நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர் 653. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர் 654. நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ் 655. நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள் 656. நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள் 657. நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து 658. நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம் 659. நாடகக் காப்பியம் - சிலப்பதிகாரம் 660. நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள் 661. நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம் 662. நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம் 663. நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன் 664. நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர் 665. நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை 666. நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர் 667. நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம் 668. நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம் பிள்ளை 669. நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப் 670. நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர் 671. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள் 672. நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி 673. நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311 674. நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார் 675. நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார் 676. நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல் 677. நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா. 678. நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா 679. நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா 680. நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம் 681. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம் 682. நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார் 683. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு 684. நெஞ்சில் ஒரு முள் நாவலாசிரியர் – மு.வரதராசன் 685. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர் 686. . நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர் 687. . நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183 688. . நெடுங்கடை - வீட்டின் முன் 689. . நெடுந்தொகை - அகநானூறு 690. நெடுநல்வாடை ஆராய்ச்சி நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை 691. . நெடுமொழி - தற்புகழ்ச்சி 692. . நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு 693. . நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர் 694. . நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார் 695. . பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை 696. . பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி 697. . பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து 698. . பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி 699. . பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார் 700. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன் 701. பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 702. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான் 703. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு 704. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல் 705. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார் 706. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன் 707. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள் 708. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை 709. பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர் 710. பத்தாம் திருமுறை - திருமந்திரம் 711. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து 712. பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் 713. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7 714. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை 715. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம் 716. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா 717. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள் 718. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி 719. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு 720. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து - நான்காம் பத்து 721. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார் 722. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார் 723. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார் 724. பதிற்றுப் பத்து திணை - பாடாண்திணை 725. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர் அரிசில்கிழார் / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 726. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர் -கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன் 727. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர் 728. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார் 729. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா 730. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை) 731. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர் 732. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 733. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே புற நூல் - களவழி நாற்பது 734. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா 735. பரணி நூலின் உறுப்புக்கள்- 13 736. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர் 737. பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை 738. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13 739. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22 740. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை 741. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர் 742. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை) 743. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10 744. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர் 745. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 746. பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன் 747. பல்லியம் - பலவகை இசைக் கருவிகள் 748. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன் 749. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் – 750. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை 751. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு 752. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம் 753. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு 754. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார் 755. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர் 756. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம் 757. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம் 758. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார் 759. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன் 760. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி 761. பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன் 762. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா 763. பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல் 764. பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர் 765. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார் 766. பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார் 767. பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார் 768. பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் 769. பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 770. பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – பரமேஷ்வரன் 771. பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார் 772. பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி என்.இராமச்சந்திரன் 773. பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார் 774. பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர் 775. பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி 776. பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல் 777. பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை 778. பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல் 779. பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு 780. பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10 781. பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள் 782. பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு 783. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10 784. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ. 785. புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து 786. புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர் 787. புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா 788. புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி 789. புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி 790. புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871 791. புராணங்கள் எண்ணிக்கை – 18 792. புலவர் கண்ணீர் நூலாசிரியர் - மு.வரதராசன் 793. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள் 794. புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர் 795. புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா 796. புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14 797. புறநானூற்றின் கிடைக்காத பாடல் – 267,268 798. புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260 799. புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து 800. புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40 801. புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா 802. புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு 803. புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160 804. புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு 805. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார் 806. புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம் 807. புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர் 808. புறப்பொருளின் பாவகை - வெண்பா 809. புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி 810. புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் – கு.ப.ராஜகோபாலன் 811. புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை 812. புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் – திருவாலங்காடு 813. புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார் 814. பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள் 815. பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை 816. பெண்களின் பருவங்கள் – ஏழு 817. பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர் 818. பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர் 819. பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார் 820. பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார் 821. பெரிய புராண உட்பிரிவு - சருக்கம் 822. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம் 823. பெரியபுராணத்திற்கு மூல நூல் திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி 824. பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார் 825. பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா 826. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து 827. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு 828. பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம் 829. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார் 830. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்) 831. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர் 832. பொருட்கலவை நூல் – பரிபாடல் 833. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார் 834. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி 835. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை 836. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி 837. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி 838. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி 839. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம் 840. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார் 841. மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி 842. மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர் 843. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 844. மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை 845. மண நூல் – சீவக சிந்தாமணி 846. மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ 847. மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 848. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம் 849. மண்திணி ஞாலம் - பூமி 850. மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 851. மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933 852. மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம் 853. மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம் 854. மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி 855. மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர் 856. மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர் 857. மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை 858. மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார் 859. மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள் 860. மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி 861. மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம் 862. மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர் 863. மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர் 864. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை 865. மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை 866. மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி 867. மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம் 868. மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம் 869. மனச்சான்று நூலாசிரியர் – மு.வ 870. மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா 871. மனத்தைக் கவரும் கலை – நாடகக்கலை 872. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு 873. மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி 874. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க 875. மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார் 876. மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம் 877. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி) 878. மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 879. மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன் 880. மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன் 881. மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர் 882. மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை 883. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள் 884. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்) 885. மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார் 886. மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார் 887. மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை 888. மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள் –ஊர் ; திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி 889. மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர் 890. மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள் 891. மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர் 892. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர் 893. மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு – மிருச்ச கடிகம் 894. முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர் 895. முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர் 896. முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,கோ.கேசவன்,கே.முத்தையா 897. முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை 898. முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர் 899. முசு – குரங்கு 900. முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம் 901. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல் 902. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா 903. முதல் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 4449 904. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 89 905. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440 906. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894 907. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது 908. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை 909. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்), முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு. 910. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம் 911. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை 912. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை 913. முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம் 914. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை 915. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை - தொல்காப்பியம் 916. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க 917. முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்) 918. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை 919. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன் 920. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி 921. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார் 922. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள் 923. முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர் 924. மூதின் முல்லை – வாகை 925. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம் 926. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர் 927. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி 928. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு, கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை 929. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990 930. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197 931. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835 932. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர் 933. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார் 934. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம் 935. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர் 936. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு 937. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு 938. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர் 939. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு 940. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர் 941. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை 942. யாப்பருங்கலம் உரையாசிரியர் - குணசாகரர் 943. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு 944. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன் 945. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ 946. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர் 947. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு 948. ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு 949. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன் 950. . ராஜி நாவலின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை 951. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார் 952. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர் 953. வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர் 954. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல் 955. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார் 956. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை 957. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி 958. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார் 959. வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர் 960. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர் 961. வட்கார் மேல் செல்வது - வஞ்சி 962. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம் 963. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம் 964. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார் 965. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு ) 966. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன் 967. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர் - குலோத்துங்கன் 968. வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி 969. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர் 970. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 971. விரிச்சி - குறி கேட்டல் 972. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர் 973. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார் 974. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார் 975. வீடும் வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன் 976. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார் 977. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர் 978. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி 979. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை 980. வெட்சி - நிறைகவர்தல் 981. வெண்டேர்ச் செழியனின் காலம் – இடைச்சங்க காலம் 982. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை 983. வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது 984. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன் 985. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் - இரேனியஸ் 986. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர் 987. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல் 988. வேய் - உளவு-ஒற்றாராய்தல் 989. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன் 990. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம் 991. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர் 992. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு 993. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார் 994. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன் 995. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார் 996. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன் 997. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி 998. மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள் 999. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன் 1000. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்