( 21 Sep, 2015) TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4 Published By : upscgk.com திருக்குறள்: சொல்பொருள்: * இனிதீன்றல் - இனிது + ஈன்றல் * ஈன்றல் - தருதல், உண்டாக்குதல் * வன்சொல் - கடுஞ்சொல் * எவன்கொலோ - ஏனோ? * சிறுமை - துன்பம் * மறுமை - மறுபிறவி * இம்மை - இப்பிறவி * நாடி - விரும்பி * அல்லவை - பாவம் * தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள் * அணி - அழகுக்காக அணியும் நகைகள் * துவ்வாமை - வறுமை * இன்புறூஉம் - இன்பம் தரும் * அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து * முகன் - முகம் * இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன் * ஈரம் - அன்பு * அளைஇ - கலந்து * செம்பொருள் - மெய்ப்பொருள் * கவர்தல் - நுகர்தல் செய்யும் தொழிலே தெய்வம் * செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். * பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு. * காலம்: 13.04.1930 - 08.10.1959 * மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம். * தனது பாடல்களில் உழக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார். ** சில பாடல் வரிகள்: செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் "பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்" "காயும் ஒரு நாள் கனியாகும் -நம் கனவும் ஒரு நாள் நனவாகும்" உரைநடை: கல்லிலே கலைவண்ணம் * காவிரி பாயும் சோழவள நாடு, அது கலைகளின் விளைநிலம், வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் - கும்பகோணம். * கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் - தாராசுரம் * இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. * நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் - ஐராவதீசுவரர் கோவில் * முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம். * யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரிபோர்த்தவர்(கஜம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம். * அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். * கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் சரிகமபதநி எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. * தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார். * தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றன. இதை மரபு அடையாளச்சினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கோவிலை கலைகளின் சரணாலயம் என்றே கூறலாம். துணைப்பாடம்: சாதனைப் பெண்மணி மேரி கியூரி * கியூரி அண்மையார் 1876 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். * தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்ததும், செவிலிபோல் * பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார். * மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார். * அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். * மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். * இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக, கணவன், மனைவி இருவரும் முதலில் பொலோனியும் என்னும் பொருளை கண்டுபிடித்தனர். * அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவிடாது ஆராய்ச்சி செய்து ரேடியம் என்னும் பொருளை கண்டுப்பிடித்தனர். இவ்விரண்டு அறிய கண்டுபிடிப்புகளுக்காக மேரி கியூரிக்கும் அவர் கணவருக்கும் 1903ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. * இவரின் கண்டுபிடிப்பைப் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன் வந்த போதும் தனது அறிவியல் கண்டுபிடிப்பை அறிவியல் உலகிற்கே கொடையாக கொடுத்தார். * மேலும் அவருக்கு இரண்டாவது முறையாக 1911 ஆண் ஆண்டு ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. * மேரி கியூரி 1934 இல் இயற்கை எய்தினார். * கியூரியின் இறப்பிற்குப்பின் அவர் மகள் ஐரினும், மருமகன் சாலிட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935 ஆண் ஆண்டு நோபல் பரிசினை பெற்றனர். * ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. * நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி. தனிப்பாடல் சொற்பொருள்: * இரட்சித்தானா? - காபாற்றினானா? * அல்லைத்தான் - அதுவும் அல்லாமல் * பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன் * குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய் * குரைகடல் - ஒலிக்கும் கடல் நூல் குறிப்பு: * புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை தனிப்பாடல் திரட்டு என்னும் நூலக தொகுத்துள்ளனர். * பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. * இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர். அந்த காலம் இந்த காலம் ஆசிரியர் குறிப்பு: * உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். * சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். * பகுத்தறிவு கவிராயர் என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவர். * காலம்: 25.09.1899 - 23.05.1981 தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம் * டிவி - தொலைக்காட்சி * ரேடியோ - வானொலி * டிபன் - சிற்றுண்டி * டீ - தேநீர் * டெலிபோன் - தொலைபேசி * கரண்ட் - மின்சாரம் * ஃபேன் - மின்விசிறி * சேர் - நாற்காலி * லைட் - விளக்கு * டம்ளர் - குவளை * சைக்கிள் - மிதிவண்டி * பிலாட்பாரம் - நடைப்பாதை * ஆபிஸ் - அலுவலகம் * சினிமா - திரைப்படம் * டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி * ரோடு - சாலை * பிளைட் - விமானம் * பேங்க் - வங்கி * தியேட்டர் - திரை அரங்கு * ஆல்பத்திரி - மருத்துவமனை * கம்ப்யூட்டர் - கணினி * காலேஜ் - கல்லூரி * யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம் * டெலஸ்கோப் - தொலைநோக்கி * தெர்மோமீட்டர் - வெப்பமானி * இன்டர்நெட் - இணையம் * இஸ்கூல் - பள்ளி * சயின்ஸ் - அறிவியல் * மைக்ரோஸ்கோப் - நுண்ணோக்கி * நம்பர் - எண் நாடும் நகரமும் நாடு: நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது. * மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. * நாளடைவில் நாடுகளின் உட்பிவுகளும் "நாடு" என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும். * முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. * இப்பொழுது அப்பெயர் பொருணை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில்லுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது. * சோழநாட்டில் மாயவரத்திற்கு அடுத்துள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கப்படுகிறது. * கூர்ரைநாடு என்பது கொரநாடு என்று மருவிற்று. * பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன. நகரம்: சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பலம்பெரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது. * பாண்டியநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராகா விளங்குகிறது. * இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன. சென்னை: திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். * அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று. புரம்: புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் "புரம்" என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும். பட்டிணம்: கடற்கரையில் உருவாகும் நகரங்கள் "பட்டிணம்" எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கபட்டிணம் ஆகியவை "பட்டிணம்" எனப் பெயர் பெற்ற ஊர்களாகும். பாக்கம்: கடற்கரைச் சிற்றூர்கள் "பாக்கம்" எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம். புலம்: கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம். புலம்: புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமராபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கும்பம்: நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் குப்பம் என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம். ஆசிரியர்: சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் "ஊரும் பேரும்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. குற்றாலக் குறவஞ்சி சொற்பொருள்: * வானரங்கள் - ஆண் குரங்குகள் * மந்தி - பெண் குரங்குகள் * வான்கவிகள் - தேவர்கள் * காயசித்தி - இறப்பை நீக்கும் மூலிகை * வேணி - சடை * மின்னார் - பெண்கள் * மருங்கு - இடை நூல் குறிப்பு: * இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர். * குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். மரமும் பழைய குடையும் சொற்பொருள்: * கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம் * பீற்றல் குடை - பிய்ந்த குடை ஆசிரியர் குறிப்பு: * அழகின் சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர். * இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு. நூல் குறிப்பு: * ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது "சிலேடை" எனப்படும். * இதனை "இரட்டுறமொழிதல்" (இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது. இலக்கணமும் மொழித்திறனும் நாட்டுப்புறத் தமிழ் அறிவோம் * கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க...? ஆனம் என்பதன் பொருள் - குழம்பு * அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா? நாழி என்பதன் பொருள் - தானியங்களை அளக்கும் படி * அகவிலை என்பதன் பொருள் - தானிய விலை * திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு? திறவுகோல் என்பதன் பொருள் - சாவி * ஒற்று எனப்படுவது - மெய்யெழுத்து ஒற்றெழுத்தைச் சேர்த்து எழுதுக: பாடலை + சொன்னேன் = பாடலைச் சொன்னேன் கடவுளை + கண்டேன் = கடவுளைக் கண்டேன் பழத்தை + தின்றேன் = பழத்தைத் தின்றேன் கண்ணனுக்கு + கொடுத்தேன் = கண்ணனுக்குக் கொடுத்தேன் மதுரைக்கு + செல்வோம் - மதுரைக்துச் செல்வோம்